பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலி - உடலை கண்டு கதறி அழுத உறவினர்கள்

x

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது...

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் நான்கு பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதனிடையே ராணுவ வீரர்கள் மன்தீப் சிங், குல்வந்த் சிங், ஹர்கிருஷ்ணன் சிங் ஆகியோரின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களது உடல்களை கண்ட உறவினர்கள் கதறி அழுத நிலையில், ஏராளமான பொதுமக்கள் கூடிய அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்