சிவப்பு, நீல நிற புடவையுடன் மரத்தடியில் கிடந்த எலும்புக்கூடு - தருமபுரியில் பரபரப்பு

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, வனப்பகுதியில் மூதாட்டி எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மசக்கல் காப்பு காட்டில், மரத்தடியில் எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. சிவப்பு மற்றும் நீல நிறத்திலான புடவை அணிந்திருந்ததால் பெண் என முடிவு செய்த வனத்துறையினர், போலீசார் உதவியுடன் எலும்புக்கூடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். விசாரணையில், முனியன் என்பவரின் மனைவி முத்தம்மாள் என தெரியவந்தது. இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, வழிதவறி வனப்பகுதிக்குள் சென்று மாயமாகியது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்