முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சீதாராம் யெச்சூரி

x

இந்தியாவை பாதுகாக்கவும், பாஜகவை வீழ்த்தவும் விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு பேட்டியளித்த அவர், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி, ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருவதாகவும், அதற்காக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்