சொத்துக்காக சகோதரி வெட்டிக்கொலை.! தந்தை மகன் வெறிச்செயல் | Thoothukudi | ThanthiTV

x

தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது சகோதரர் முருகேசன். இவர்களுக்கு குடும்ப சொத்தாக வீடு ஒன்று அண்ணாநகரில் இருந்து வந்துள்ளது. அந்த வீட்டினை, கடன் பிரச்சனையால் சிரமப்படும் தனது சகோதரிக்கே முருகேசன் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் மாரியம்மாளும், அவரது கணவர் ராம்குமாரும் வசித்து வந்துள்ளனர். இதனிடையே, முருகேசனின் மனைவி நடத்தி வந்த சீட்டு ஒன்றில் 5 லட்ச ரூபாய் பணம் பெற்ற மாரியம்மாள், அதற்கான பணத்தை முறையாக கட்டாததால் முருகேசனுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு சொத்து பிரச்சனையும் இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், முருகேசனும், அவரது மகனும், வீட்டிற்குள் புகுந்து மாரியம்மாளையும், அவரது கணவரையும் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்