"அரசுப்பள்ளியை சீரமைத்த சிங்கப்பூர் சகோதரர்கள்"..முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

x

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில், கஜா புயலால் சேதமடைந்த 60 ஆண்டுகால அரசுப் பள்ளியை, சீரமைத்த சிங்கப்பூர் வாழ் சகோதரர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வாழ் சகோதரர்களான இளங்கோவன், முத்தழகன், ராஜகோபால் ஆகியோர், தங்கள் தாய் தனசேகரி-க்காக நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் சீரமைத்த செயலுக்கு முதலமைச்சராக மட்டுமல்லாமல் திருவாரூர்காரனாகவும் உள்ளம் நெகிழ்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பள்ளிக்கு 'தனசேகரி அம்மாள் அறிவரங்கம்' என பெயரிட்டதற்கு வாழ்த்து தெரிவித்தப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்