கவர்னர் மாளிகையில் சிக்கிம் உதய நாள்.."ராஜ்பவன் என்றும் மக்களுக்கானது" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

x

ராஜ் பவன் என்றும் மக்களுக்கானது என்றும், காசி தமிழ் சங்கமம் இந்திய ஒருமைப்பாட்டை இணைக்கும் விழா என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலம் உருவான தின விழா கொண்டாட்டம் ராஜ் பவனில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிக்கிம் மாநிலத்தினர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, சமூக கலாச்சார ஒன்றிணைவு இந்தியர்களுக்கு இயல்பிலேயே இருப்பது என்றார். மற்ற மாநிலத்தவர்களின் விழாக்களையும், நாம் கொண்டாட வேண்டும் எனவும் ஆளுநர் ரவி பேசினார். மேலும் நிறைய இடங்களில் உள்ளவர்களுடன் கலாச்சார ஒருங்கிணைப்பில் ஈடுபட வேண்டும் என்றும், விழாக்கள்-கொண்டாட்டங்கள் நம்மை இணைக்கின்றன என குறிப்பிட்டார். அரசியல் அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் உள்ளதாகவும், கலாச்சார அடிப்படையில் நமக்கு ஒற்றுமை உள்ளது என்றும், அனைத்து மாநில விழாக்களையும் கொண்டாட பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் ரவி கூறினார். ராஜ் பவன் என்றும் மக்களுக்கானது என்றும், காசி தமிழ் சங்கமம் இந்திய ஒருமைப்பாட்டை இணைக்கும் விழா என்றும் ஆளுநர் ரவி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்