ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பேச்சால் சர்ச்சை

x

இந்துக்கள் ஒவ்வொரு வீட்டிலும் வாள் இருக்க வேண்டும் என ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசி இருப்பது சர்ச்சையாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் களபுறுகியில் நடைபெற்ற இந்துக்கள் மாநாட்டில் பேசிய ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முதலிக், மீண்டும் ஆயுதங்களை வைத்து வழிபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு வாள் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆயுதங்களை வைத்திருப்போர் குற்றவாளிகள் என்றால், முதலில் காலி துர்கா போன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்