மாணவர்கள் கண்முன்னே தலைமையாசிரியரை அசிங்கமாக திட்டி தாக்கிய பள்ளி தாளாளர் தேனியில் அதிர்ச்சி

x

தேனி மாவட்டம் தேனி திட்டச்சாலையில் இயங்கி வரும், அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி தாளாளர் அன்பழகன், மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தான் தாளாளராக உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஆசிரியையுமே புகாரளிப்பதாக கருதிய அன்பழகன், அவர்களை தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற அவர், தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியுள்ளார். பின்பு குழந்தைகளை உள்ளே வைத்து வகுப்பறைகளையும், மெயின் கேட்டையும் பூட்டிவிட்டு சென்றுள்ளார். தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விரைந்து சென்று குழந்தைகளை மீட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அன்பழகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்