டெல்லியில் ஜிம்மில் 'ஷாக்' மரணம்..!Treadmill-ல் ஓடிக்கொண்டிருக்கும் போதே சுருண்டு விழுந்து இளைஞர் துடிதுடித்து பலி

x

டெல்லியில் ட்ரெட்மில்லில் ஓடும் பொழுது மின்சாரம் தாக்கியதில் ஜிம் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.

இன்றைய உலகில் பிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞர்கள் அதிகம். குறிப்பாக கட்டுக்கோப்பான உடல் அழகிற்காக ஜிம்மை நோக்கி படையெடுப்பவர்கள் ஏராளம்.

அப்படி ரெகுலராக ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டவர் தான் டெல்லியைச் சேர்ந்த இந்த இளைஞர்.

சக்ஷாம் ப்ருதி என்ற 24 வயதான இந்த இளைஞர் தற்போது உயிரோடு இல்லை. வழக்கமாக காலை எழுந்தவுடன் ஜிம் சொல்பவர்... ஆப்பிள் சாப்பிட்டு விட்டு.... காலை ஆறு மணி அளவில் டெல்லி ரோகினியில் உள்ள ஜிமிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு ட்ரெட்மில்லில் சிறிது நேரம் ஓடிய பிறகு.... தரையில் அமர்ந்து ஓய்வெடுக்க முயன்றவர்... திடீரென கீழே சுருண்டு விழுத்திருக்கிறார்.

இதை எடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சாக்ஷாம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சாக்ஷாமின் மரணத்திற்கு காரணம் என்ன ? என்பது தெரியாமல் அவர்களது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகு தான் தெரிந்தது.... ட்ரெட்மில்லில் ஓடிய போது மின்சாரம் பாய்ந்ததில் அவர் உயிரிழந்திருக்கிறார் என்று..

இதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஜிம் ஓனரை அலட்சியமாக இருந்து ஒரு உயிர் பறிபோக காரணமாக இருந்த காரணத்தால் போலீசார் கைது செய்தனர்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து... ரெகுலராக ஜிம் சென்று கொண்டிருந்தவருக்கு இப்படியும் மரணம் ஏற்படுமா ? என்ற இந்த சம்பவம் பேர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்