லிபியாவில் சோகம் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து குழந்தைகள், பெண்கள் உட்பட 55 அகதிகள் கடலில் மூழ்கி பலி

x

லிபியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 55 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவின் கராபவுலியில் இருந்து 60க்கும் மேற்பட்டவர்கள் படகு மூலம் மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த போது, அந்தப் படகு கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 55 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார பிரச்சினைகளால் பலர் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணங்கள் மேற்கொள்கையில் இதுபோன்ற விபத்துகள் நடப்பது வாடிக்கையாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்