"எனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்" - டெல்லி மகளிர் ஆணைய தலைவி பகீர் தகவல்

x

குழந்தைப் பருவத்தில் தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் மகளிர் ஆணையம் சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில், இதுகுறித்து சுவாதி மாலிவால் பேசியுள்ளார். அதில், தனது தந்தை தன்னை பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்தியதாகவும், அவருக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற ஆண்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்ததாகவும், சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்