கேரள நடிகைக்கு பாலியல் தொல்லை - பல்சர் சுனிலுக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

x

கேரளாவில் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் தரப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பல்சர் சுனிலின் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது.

கடந்த 2017ம் ஆண்டு கேரளாவில் பிரபல நடிகையை ஓடும் காரில் வைத்து ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக உள்ளார். முதல் குற்றவாளியாக பல்சர் சுனில் உள்ளார். இதுவரை கைது செய்யப்பட்ட 8 பேரில், 7 பேர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். முதல் குற்றவாளியான பல்சர் சுனில் கடந்த 6 வருடங்களாக சிறையில் உள்ளார். இவரின் ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி மீண்டும் பல்சர் சுனில் மனு அளித்து இருந்தார். இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதால், பல்சர் சுனிலுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்ற உயர்நீதிமன்றம் பல்சர் சுனிலின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்