10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி ஊழியருக்கு 10 ஆண்டு கடுங்காவல்

x

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஊழியருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பரணிதரன். அரசு பள்ளியில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்த இவர், அதே பள்ளியை சேர்ந்த 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த புதுச்சேரி சிறப்பு போக்ஸோ நீதிமன்றம், பரணிதரனை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்