உயிர் பலி வாங்கிய சீரியல் லைட்.. தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வந்த வியாபாரிக்கு நேர்ந்த பயங்கரம்

x

காரிமங்கலம் அருகே விநாயகர் சிலை அலங்காரத்திற்காக போடப்பட்டு இருந்த மின் ஒயரில் சிக்கி தள்ளுவண்டி வியாபாரி உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் மல்லிக்குட்டை கிராமத்தை கிருஷ்ணன் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார்.

இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பி செல்லும் போது விநாயகர் சதுர்த்திக்காக தெருவில் போடப்பட்டிருந்த சீரியல் லைட் ஒயரில் தள்ளுவண்டியின் மேற்கூரை உரசியுள்ளது.

அப்போது மின்சாரம் பாய்ந்ததில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கிருஷ்ணணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்