தொடர் செயின் பறிப்பு - சிக்கிய மூன்று கொள்ளையர்கள்

x

சென்னை கொளத்தூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த நாகராணி என்பவரது செயினை, மர்ம நபர்கள் அறுத்து சென்றனர். இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மோகன், மணிகண்டன், கவியரசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் மூவரும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 50 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்த கொளத்தூர் போலீசார், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்