குஷ்பு மீது பரபரப்பு புகார்

x

பெண்களை இழிவாக பேசியதாக கூறி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜு என்பவர் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாஜக நிர்வாக குஷ்பூ மீது பெண்களை இழிவாக பேசியதாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ட்விட்டர் பக்கத்தில் ஜெய்சங்கர் ஜெயன் நாத் என்பவருக்கு பதில் அளிப்பதற்கு தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் தெளிவான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு செய்துள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்