"தொப்பி ஒரு கேடா..." - இஸ்லாமிய சிறுவனை தாக்கிய மர்மநபரால் சென்னையில் பரபரப்பு

x

சென்னையில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை இரவு, அரபி வகுப்பை முடித்துவிட்டு சைக்கிளில் ,இரவு 8 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். வழியில் கண்ணதாசன் தெரு சந்திப்பில் வரும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சிறுவனிடம் தொப்பி ஒரு கேடா என கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து, சிறுவனின் பெற்றோர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 40 வயது மதிக்கத்தக்க நபர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், குறுகலான அந்த சாலை சந்திப்பில் இருவரும் நேருக்கு நேர் வாகனங்களில் மோதிக்கொண்டதால், ஆத்திரத்தில் தாக்கியதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்