தண்டவாளத்தில் நின்று செல்ஃபி... ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் - நொடி பொழுதில் பிரிந்த உயிர் - திருப்பூரில் பயங்கரம்

x

திருப்பூரில் ரயில் முன் நின்று செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பர்கூரைச் சேர்ந்த பாண்டியன், விஜய் என்ற 2 இளைஞர்கள், அணைப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ரயில் முன் நின்று, இருவரும் செல்பி எடுக்க முயன்றபோது, ரயில் மோதி தூக்கி வீசப்பட்டனர்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த ரயில்வே போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்