விளைநிலங்களில் புகுந்த கடல்நீர் - வேதனையில் துடிக்கும் விவசாயிகள்

x

சீர்காழி அருகே கடல் நீர் உட்புகுந்து, சம்பா பயிர்கள் நாசமானதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால், மீனவ கிராமத்தில் புகுந்த கடல் நீர், பாசன வாய்க்கால் வழியாக நெய்தவாசல், கீழையூர், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள் விளைநிலங்களில் தேங்கியது.

5 நாட்களாக தேங்கிய கடல் நீரை விவசாயிகள் மற்றும் மீனவ கிராம மக்கள் ஜேசிபி உதவியுடன் வெளியேற்றி வருகின்றனர்.

இதனிடையே, சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் செய்வதறியாது மன வேதனை அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்