மது போதையில் பள்ளிசீருடையுடன் மயங்கி கிடந்த பள்ளி மாணவிகள்..!! கரூரில் அதிர்ச்சி சம்பவம்
மது போதையில் பள்ளிசீருடையுடன் மயங்கி கிடந்த பள்ளி மாணவிகள்..!! கரூரில் அதிர்ச்சி சம்பவம்
கரூரில் மதுபோதையில் மயங்கி கிடந்த பள்ளி மாணவிகளை மீட்ட போலீசார், அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கரூரில் உள்ள அரசுப்பள்ளியில் ப்ளஸ் ஒன்னில் தோல்வியடைந்த மாணவிகள் 3 பேர், சிறப்பு தேர்வு எழுதிவிட்டு வந்தனர். அப்போது ஒரு மாணவியின் ஆண் நண்பர் ஒயின் வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. இதனை குடித்த மாணவிகள் 3 பேரும் சாலையின் ஓரம் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் மாணவிகள் 3 பேரையும் மீட்டு அறிவுரை கூறியதோடு பெற்றோரை வரவைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்..
Next Story