பெற்றோருடன் ஏற்பட்ட சண்டை...மாணவி எடுத்த விபரீத முடிவு - தோழியுடன் பள்ளியில் மயங்கி கிடந்ததால் அதிர்ச்சி

x

திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை அரசுப்பள்ளியில், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் வீட்டில், பெற்றோர் தினமும் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, பள்ளியில் எறும்புக் கொல்லி மருந்து கலந்த பாட்டில் தண்ணீரை குடித்து, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது சகமாணவி ஒருவரும், விஷம் கலந்தது என தெரியாமல் தண்ணீரை குடித்துள்ளதாக தெரிகிறது. மயங்கிய நிலையில் இருந்த 2 மாணவிகளுக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்