சிவகாசியில் அடுத்த அதிர்ச்சி... தூக்கிட்டு கொண்ட பள்ளி மாணவி மரணம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
x

சிவகாசி ரிசர்வ்லைன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர், வீட்டில் யாரும் இல்லா நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாரனேரி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி சிறுமியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்