பள்ளி, கல்லூரி, வேலை, இப்போது இறப்பிலும்...இணை பிரியாத உயிர் நண்பர்கள் - சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

x

நண்பர் உயிரிழந்த தகவல் அறிந்து சக நண்பரும் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருவாரூரில் அரங்கேறியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் பால்ய நண்பர்கள். 80 வயதாகும் சிவராமகிருஷ்ணனுக்கு மனைவி, இரண்டு மகன் மற்றும் மகளும், 82 வயதாகும் ராமலிங்கத்திற்கு, மனைவி மற்றும் 2 மகன், இரண்டு மகள்களும் உள்ளனர். சிவராமகிருஷ்ணன் மன்னார்குடி அருகே நாலாம்தெரு பகுதியிலும், ராமலிங்கம் அசேஷம் பகுதியிலும் வசித்து வந்தனர். இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்து, நாகையில் ஒரே அறையில் தங்கி பாலிடெக்னிக் படிப்பை முடித்தனர். பாமணியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் இருவரும் வேலைக்குச் சேர்ந்து, ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனர். இருவரது குடும்பத்தினரும் சுப நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது, சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிவராமகிருஷ்ணன் உடல்நிலை பாதித்து உயிரிழந்த தகவலால் அதிர்ச்சியடைந்த ராமலிங்கமும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்