பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து.. குடிபோதையில் ஓட்டுநர்..? கொந்தளித்த தாய்மார்கள்

x

கச்சிராயப்பாளையம் அருகே, தனியார் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக, பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் காட்டுக்கொட்டாய் பகுதியிலிருந்து மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி பேருந்து, விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு பள்ளி மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்தநிலையில் அந்த மாணவர்களின் தாயார், ஓட்டுனர் குடிபோதையில் அதிவேகமாக பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக புகாரளித்தார்.

இதனையடுத்து பேருந்தின் ஓட்டுனர் தங்கராசுவை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்