'குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்' | பகீர் கிளப்பும் கோர சம்பவம் - பின்னணி என்ன?

x

சத்தியமங்கலம் அருகே 3 வயது ஆண் குழந்தையை கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும் இவரது மனைவி சரிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது, மனைவி சரிதாவும், 3 வயது மகன் பவன் கார்த்திக்கும் மின்விசிறியில் தூக்கிட்டவாறு சடலமாக தொங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக சரிதா தனது குழந்தைக்கு சாணிபவுடன் விஷத்தை அளித்ததும், பின்னர் மகனுடன் தூக்கில் தொங்கியதும் தெரியவந்தது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்