சட்டென யானைக்கு வந்த கோபம் - தூள் தூளான மின் கம்பம்

x

சத்தியமங்கலம் அருகே காட்டு யானை ஒன்று, மின்கம்பத்தை தும்பிக்கையால் முறித்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கரளவாடி கிராமம் அமைந்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று, மின் கம்பத்தை தும்பிக்கையால் மோதி முறித்துள்ளது. இந்த காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.



கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் காட்டு யானை நடமாட்டத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சின்னக்கானல் பகுதியில் நடமாடி வரும் அரிக்கொம்பன் என்ற ஓற்றை காட்டுயானை பன்னியார் எஸ்டேட் பகுதியிலுள்ள ரேசன் கடையை இடித்து நொறுக்கியது.

மேலும் பி.எல் ராம் பகுதியை சேர்ந்த பென்னி என்பவரின் வீட்டையும் இடித்து சேதப்படுத்தியது . அதே பகுதியிலுள்ள மகேஸ்வரி என்பவரின் வீட்டின் சுவற்றை காட்டு யானை இடித்து தள்ளியதில் கட்டிலில் படித்திருந்த மகேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டு யானையை விரட்டினர். அச்சுறுத்தி வரும் அரிகொம்பன் யானையை வனப்பகுதியில் விரட்ட கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்