சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு நீதிபதி போட்ட உத்தரவு

x

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையில், தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நேரில் ஆஜராகி சாட்சியளித்தார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில், சாத்தான்குளம் காவலர் ரேவதியிடம் வாக்குமூலம் பெற்ற தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல், மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்