தாயை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த 5வயது சிறுவன்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே, தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்தான்.
x

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே, தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்தான்.குப்பணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்பவர், வீட்டில் சமைத்துக்குக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நல்ல பாம்பு ஒன்று வந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ஐந்து வயது மகன் கார்த்திக் ராஜா, பாம்பை விரட்ட முயன்ற போது, சிறுவனை கடித்து விட்டது. உடனடியாக சிறுவனை மீட்ட உறவினர்கள், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்