பட்டப்பகலில், பரபரப்பான ரோட்டில் பேக்கரிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய தூய்மை பணியாளர்கள்.. வெளியான பரபரப்பு காட்சி

x

கள்ளக்குறிச்சி அருகே தூய்மை பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பேக்கரி கடை ஊழியர் மீது புகார் எழுந்துள்ளது.

சின்னசேலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர் கொளஞ்சி என்பவர், குப்பைகளை தரம்பிரித்து வழங்கும்படி, பேக்கரி கடை ஊழியரிடம் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டத்தில், பேக்கரி கடை ஊழியர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பேக்கரி கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பேரூராட்சி செயல் அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, தூய்மை பணியாளர் கொளஞ்சி மற்றும் சக பணியாளர் இணைந்து பேக்கரி ஊழியரை தாக்கும் வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்