ரயிலில் சமோசா வியாபாரி வெட்டிக்கொலை...கள்ளக்காதல் விவகாரத்தில் தங்கை வெறிச்செயல்....

x

சென்னை-சைதாபேட்டை

அக்காவை கொன்ற மகிழ்ச்சியில் ஆனந்த குத்தாட்டம்...

கள்ளக்காதலை கண்டித்ததால் நடந்த பயங்கரம்....

ரயிலில் சமோசா வியாபாரி வெட்டிக்கொலை...

கள்ளக்காதல் விவகாரத்தில் தங்கை வெறிச்செயல்....

புவனேஷ் - இறந்தவரின் கணவர்

ரயில்ல சமோசா விக்குற ஒரு பெண் வியாபாரிய ப்ளாட்ஃபார்ம்ல வச்சி துள்ளதுடிக்க வெட்டி கொன்னு இருக்கு ஒரு மர்ம கும்பல். கள்ளக்காதல் மோகத்துல, கூட பொறந்த அக்காவயே உருதெரியாம அழிச்சிட்டு, குத்தாட்டம் போட்ட ஒரு பாசமலரோட கததான் இது.

தாரை தப்பட்டை காதை கிழிக்க, கையை மடக்கி நாக்கை கடித்து, சாவு வீட்டில் மரண குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் இவரை பார்த்ததும் சோகத்தில் ஆடுகிறார் என்று எண்ண வேண்டாம்.

உடன் பிறந்த அக்காவையே அடையாளம் தெரியாமல் கூறுபோட்ட ஆனந்த களப்பில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் காணொளி தான் இது.

யார் இந்த குத்தாட்ட தங்கை...?அக்காவையே போட்டுதள்ள காரணம் என்ன..? சைதாப்பேட்டையை அலறவிட்ட கொலை சம்பவத்தின் பின்னணியை அறிந்து கொள்ள களத்தில் இறங்கினோம்.

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம்.... ஜூலை 19 ஆம் தேதி இரவு 7 மணி....

எப்போதும் ரயில்களின் சத்தத்தை மட்டுமே கேட்டு பழகிய அந்த தண்டவாளங்கள், அன்று ஒலித்த ஒரு பெண்ணின் அலறலில் அடங்கி போனது.



மின்சார ரயிலில் சமோசா விற்றுக்கொண்டிருந்த பெண் வியாபாரியை 4 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல், ப்ளாட்ஃபார்மிலேயே வைத்து துள்ளதுடிக்க வெட்டி கொலை செய்திருக்கிறது.

கொல்லப்பட்டவர் மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சைதாபேட்டையை சேர்ந்த டக்கா முருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். டக்கா முருகன் சமீபத்தில் இறந்து விட்ட நிலையில் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த புவனேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் ராஜேஷ்வரி.

மின்சார ரயிலில் பழம், சமோசா விற்று பிழைப்பு நடத்தி வந்த நிலையில் தான் ராஜேஷ்வரி இப்படி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

தகவல் அறிந்து சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் , உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாமல் போனது, குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சவாலாக மாறி இருக்கிறது. தனிப்படை அமைத்து தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்த தீவிர விசாரணையில் நாகவல்லி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது தான் தங்கையே அக்காவை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

ஆம்... கைது செய்யப்பட்ட நாகவல்லி வேறுயாருமல்ல... ராஜேஷ்வரியின் உடன்பிறந்த தங்கை.

கொலைக்கான காரணம் ராஜேஷ்வரி தங்கையின் கள்ளக்காதலை கண்டித்தது தான்.

சமோசா வியாபாரியான ராஜேஷ்வரி தாம்பரம் டூ பீச் மின்சார ரயில் ரூட்டின் குட்டி சொர்ணாக்கா. ரயிலில் யார், என்ன விற்க வேண்டும்..? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்...இதனால் ராஜேஷ்வரி மீது பலருக்கும், முன்விரோதம் இருந்திருக்கிறது.

இந்த தொழிற்போட்டியில் கைது செய்யப்பட்ட ஜெகதீசன்,ராஜேஷ்வரின் மீது கொலை வெறியில் இருந்திருக்கிறார். மற்றொருபுறம் திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நாகவல்லிக்கு சக்திவேல் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது.

அந்த கள்ளக்காதல் எல்லைமீற சக்திவேலுடன் வீட்டை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார் நாகவல்லி. தங்கை இப்படி பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு, கள்ளக்காதலனுடன் கூத்தடிப்பது ராஜேஷ்வரிக்கு கோவத்தை கிளப்பி உள்ளது.

இதனால் நாகவல்லியிடம் கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்திருக்கிறார் ராஜேஷ்வரி. ஆனால் அவர்கள் கேட்டபாடில்லை.

அவர்கள் காதலை யாராலும் பிரிக்க முடியவில்லை. இதனால் கடுப்பான ராஜேஷ்வரி, மீண்டும் காதலை தொடர்ந்தால் இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.

அக்காவின் ரவுடிசத்தை அறிந்த நாகவல்லி, எப்படியும் ராஜேஷ்வரி சொன்னதை செய்து விடுவாள் என்ற அச்சத்தில் இந்த கொலை திட்டத்தை தீட்டி உள்ளார்.

ஏற்கனவே ராஜேஷ்வரியை கொல்ல துடித்த ஜெகதீசனோடு கைகோர்த்து,

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த அன்று மின்சார ரயிலில் சமோசா விற்றுக்கொண்டிந்த ராஜேஷ்வரியை சக்திவேலும் ஜெகதீசனும் கூட்டாளிகளுடன் சுற்றி வலைத்து வெட்டி கொன்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

விசாரணையின் முடிவில் நாகவல்லி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்