ரோந்து சென்ற போலீஸ் காரையே ஆட்டையை போட்ட பலே ஆசாமி

x

சேலம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகர காவல்துறையின் ரோந்து வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

குமாரசாமிப்பட்டி பகுதியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பொலிரோ ரோந்து வாகனம் மாயமானது.

பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து, சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த மதன் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது, அவரிடம் இருந்து ரோந்து வாகனத்தை மீட்ட போலீசார், அரசு முத்திரை பயன்படுத்தப்பட்டிருந்த இன்னோவா காரையும் பறிமுதல் செய்தனர்

. இதுகுறித்து கைதான நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்