விதவை கோலத்தில் சுமங்கலி பெண்கள் | சேலத்தில் நடந்த விநோதம்

x

சேலத்தில், சுமங்கலி பெண்கள் விதவை கோலத்தில் பொங்கல் வைத்து விநோத வழிபாடு நடத்தினர். தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நல்லசேவன் கோயில் திருவிழாவையொட்டி பெண்கள் விதவை கோலம் பூண்டு நள்ளிரவில் கோயிலில் பொங்கல் வைத்தனர். நள்ளிரவில் தொடங்கிய பெண்களின் வழிபாடு விடிய விடிய நடைபெற்றது. இந்த விநோத வழிபாட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர், அதிகாலையில், போலீஸ் சீருடையில் வந்த பூசாரி, 200க்கும் மேற்பட்ட கிடா, சேவல், கோழிகளை பலியிட்டு பூஜை செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்