பாட்டிக்கு கிடைக்காத பென்ஷன்...தூக்கிட்டு போன ஊர் பேரன்கள் - கலெக்டர் ஆபீசில் வினோத சம்பவம்

x

மூதாட்டிக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு மூதாட்டியைத் தூக்கிக் கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சஞ்சீவிராயன் பேட்டையைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி செல்லம்மாளுக்கு கடந்த 10 மாதங்களாக முதியோர் உதவித் தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் செல்லம்மாள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக பார்த்திபன் என்பவர் மூதாட்டியைத் தூக்கிக் கொண்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து வித்தியாசமான முறையில் மனு அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்