தமிழகத்தில் கலப்பட மது விற்பனையா..? - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

x

அரசு மதுக்கடை மரணங்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டுமென, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் மது குடித்த இருவர் உயிரிழந்தது, அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். அவர்கள் குடித்த மதுவில் நஞ்சு எதுவும் கலக்கவில்லை என ஆய்வில் தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அப்படியானால் அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் என்ன என்ற அச்சம் எழுவதாக கூறியுள்ளார். அரசு மதுக்கடைகள் மற்றும் பார்களில் மது வாங்கி குடித்தவர்கள், அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மதுக்கடைகளில் கலப்பட மது விற்பனை செய்யப்பட்டதா என எழுப்பப்படும் ஐயங்களுக்கு, விடையளிக்க வேண்டியது அரசின் கடமை எனவும் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், அரசு மதுக்கடை மரணங்கள் குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்