போலந்து மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலா? பரிதாபமாக பறிபோகும் அப்பாவி உயிர்கள்! russia ukraine war

x

ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய போது, சில ஏவுகணைகள் கிழக்கு போலந்து நாட்டில் விழுந்ததில் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 9 மாதங்களாக ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷிய ஏவுகணைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதில் சில ஏவுகணைகள் கிழக்கு போலந்தில் உக்ரைனின் எல்லைக்கு அருகில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், 2 பேர் பலியானதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ள நிலையில், நேட்டோ நாடுகளின் தூதுவர்கள் இது குறித்து இன்று விவாதிக்க உள்ளனர். இதனிடையே, இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்