நீச்சலுடன் கூடிய ஓட்டப்பந்தய போட்டி..அசத்திய 10 வயது சிறுமி

x

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை கோவளம் ப்ளூ பீச் கடற்கரையில், நீச்சலுடன் கூடிய ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பது குறித்தும், நீச்சலின் முக்கியத்துவம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் சிறுவர், சிறுமியர், மாற்றத்திறனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குழந்தைகளுக்கான 750 மீட்டர் நீச்சல் போட்டியில், ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஸ்ரீநித்தி, முதல் பரிசு வென்று அசத்தினார். தமிழ்நாட்டில் நீச்சலுடன் கூடிய ஓட்டப்பந்தய போட்டி, முதல்முறையாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்