தாய்க்கு அனுப்பிய ரூ.3.69 லட்சம்...OTP கேட்டு ஆட்டை போட்ட ஜார்க்கண்ட் நபர்

x

சங்கரன்கோவில் அருகே, செல்போனில் பேசி வங்கி கணக்கில் இருந்து மூன்றரை லட்சம் ரூபாயை மோசடி செய்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்...தென்காசி மாவட்டம் குருஞ்சாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவர் கடந்த ஆண்டு தனது தயாருக்கு மூன்று லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கு மூலம் அனுப்பி உள்ளார். ஆனால், பணம் சென்றடையாத நிலையில் வங்கி தொடர்புடைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய வட மாநில இளைஞர், சுந்தரவேலிடம் ஓ.டி.பி. பெற்று அவரது வங்கி கணக்கில் இருந்த மூன்று லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகாரை விசாரித்து வந்த மாவட்ட சைபர் கிரைம் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இதில், மோசடியில் ஈடுபட்டவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் தாஸ் என்பது தெரியவந்ததை தொடர்ந்து, ஜார்க்கண்ட் விரைந்த தனிப்படை போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்