டாஸ்மாக்கில் ரூ.20 எக்ஸ்ட்ரா வசூல்.. தட்டிக்கேட்ட மதுப்பிரியர் கடத்தல்? - போனை உடைத்து அராஜகம்

x

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்பதை தட்டிக்கேட்ட மதுப்பிரியர், மதுபான கடை மேலாளரால் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள அரசு மதுபான கடையில், ஆனந்தன் என்பவர் மதுவாங்க சென்றுள்ளார். அப்போது, விற்பனையாளர் மதுபாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக கேட்டதை ஆனந்தன் தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மதுப்பிரியரை, மதுபான மேற்பார்வையாளர் மாதேஷ் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.


Next Story

மேலும் செய்திகள்