குப்பைகளை வீசினால் ரூ.10,000 அபராதம் - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

கேரள மாநிலம் கொச்சியில் பொது இடங்களில் குப்பைகளை வீசினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொச்சி பிரம்மபுரத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியது. மேலும், குப்பைகளை அப்புறப்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்