முதியவரிடம் துப்பாக்கி முனையில் ரூ.1 லட்சம் கொள்ளை..கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய சம்பவம் பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்

x

டெல்லியில் உள்ள ஹர்ஷ் விஹார் பகுதியில் சன்சார் சிங் என்ற முதியவர் நேற்றிரவு தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது இருச்சகர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், முதியவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பையை பறித்துக் கொண்டு மற்றொரு வாகனத்தில் தப்பிச் சென்றனர். முதியவரின் பையில் இருந்த ஒரு லட்ச ரூபாயை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளன்ர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்