"மோதல்களை தவிர்ப்பவர், மோதலுக்கு தயாராக இருப்பவர் அல்ல" - முரசொலி வெளியிட்டுள்ள விளக்கம்...

x

மோதல்களை தவிர்ப்பவரே தவிர,மோதலுக்கு தயாராக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் அல்ல என, முரசொலி நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது..

ஆளுநருடன் மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், குடியரசு தின விழாவினையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இது தொடர்பாக முரசொலி நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், தேநீர் விருந்துக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயர் பதிவு செய்யப்பட்டிருந்ததும், தொலைபேசி மூலமாக ஆளுநர் அழைப்பு விடுத்ததும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டிய நிகழ்வுகளில் பெருந்தன்மையுடன் கூடிய அணுகு முறையினை முதல்வர் பின்பற்றினார் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் மோதல்களை தவிர்ப்பவரே தவிர, மோதலுக்கு தயாராக இருப்பவர் அல்ல எனவும், பிரச்சனையின் காரண கர்த்தாக்களைப் பற்றி கவலைப்பட மாட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்