வெளிநாடு அழைத்துச் செல்லப்படும் ரிஷப் பண்ட்... கண்காணித்து வரும் பிசிசிஐ மருத்துவர்கள்

x

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரேடாடூனில் தற்போது பண்ட் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பண்ட்டின் உடல்நலனை பிசிசிஐ மருத்துவர்கள் குழு கண்காணித்து சிகிச்சை அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக மும்பையில் வைத்து சிகிச்சை அளிக்க பிசிசிஐ மருத்துவர்கள் குழு பரிந்துரைத்து இருப்பதாகவும், தசைநார் கிழிவை சரிசெய்வதற்கான சிகிச்சைக்காக ரிஷப் பண்ட் வெளிநாடு அழைத்துச் செல்லப்படலாம் என்றும் தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்