இந்திய வீரர் பண்ட் கார் விபத்தானது எப்படி? - வெளியான சிசிடிவி காட்சிகள்-கண் அசந்த நேரத்தில் பயங்கரம்

x

இந்த விபத்து தொடர்பாக டிஜிபி அசோக் குமார் கூறும்போது, "இன்று அதிகாலை ரிஷப் பண்ட் ஓட்டி வந்த கார் 5:30 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரூர்கி அருகில் உள்ள முகமதுபூர் ஜாட் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ரிஷப் பண்ட் கூறியதன் படி கார் ஓட்டும்போது அதிகாலை நேரம் என்பதால் சற்றே தூங்கியிருக்கிறார். கண் அசந்த நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் இடித்து தீப்பிடித்தது. அதிலிருந்து கண்ணாடியை உடைத்து உயிர் தப்பினார் ரிஷப் பண்ட். முதலில் ரூர்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது டேராடூன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்" என்றார். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரிஷப் பண்ட் சிகிச்சைக்கான செலவு முழுதையும் மாநில அரசு ஏற்கும் என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தரகாண்டில் இருந்து டெல்லியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் சாலை தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்தது. இதனையடுத்து பண்ட் காரின் கண்ணாடியை உடைத்து வெளியேறினார்.

பண்ட் தானே காரை ஓட்டிச் சென்றதாகவும் உத்தரகண்ட் மாநிலத்தில் ரூர்க்கி அருகே விபத்து நடந்ததாகவும் முதல்கட்ட தகவல். விபத்தில் காயம் அடைந்த பண்ட் ரூர்க்கியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்