மாணவனுக்கு அடிக்கடி ஓரினச்சேர்க்கை தொல்லை - டிஸ்மிஸ் ஆன பள்ளி ஆசிரியர் விபரீத முடிவு?

x

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன்.

இவர், பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவனிடம் தகாத முறையில் ஈடுபட்டு ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தாக கூறி மாணவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதனால், ஆசிரியர் சீனிவாசனை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்த நிலையில், சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பானது.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், பள்ளியில் படிக்கும் பல மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனை சிகிச்சை முடிந்து வந்த சீனிவாசனை மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்