கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

x

கேரளாவில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால்,10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆலப்புழா, கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் மாற்றப்பட்டுள்ளதாகவும், அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்ம் என்றும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு கேரளா-லட்சத் தீவு பகுதிகளுக்கும், கர்நாடக கடற்கரை பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்