ஜெர்மனியில் சிகிச்சை முடிந்து கனிமொழியுடன் சென்னை திரும்பினார் ராசாத்தி அம்மாள் |

x

ஜெர்மனி மருத்துவமனையில் பெற்று வந்த சிகிச்சை முடிந்ததை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்திஅம்மாள், சென்னை திரும்பினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அவரது மகளுமான கனிமொழி அவருடன் வந்தார். விமானநிலையத்தில் ராசாத்திஅம்மாளை திமுக எம்.பி டி.ஆர்.பாலு வரவேற்றார். அஜீரண பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 25ஆம் தேதி ராசாத்திஅம்மாள் ஜெர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்