கொரோனா ஊரடங்கில் பழக்கம்.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - 2 குழந்தைக்கு தந்தை செய்த காரியம்

x

ராணிப்பேட்டையில் 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த நபரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாரதிநகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்.

இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தனியார் தோல் தொழிற்சாலையில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கொரனா ஊரடங்கின் போது தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த 14 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி சிறுமியை கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தித்த சுந்தர்ராஜ், அவரை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தராஜை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்