இலங்கை தலைமன்னார் டூ தனுஷ்கோடி வரை..11 மணி நேர போராட்டம்..45 வயது பெண்ணின் அசத்தல் சாதனை

x

இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை தொடர்ந்து 11 மணி நேரம் கடலில் நீந்தி சாதனை படைத்த 45 வயது பெண்மணிக்கு. பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் மீனாட்சி பகுஜா. இவர், ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு இலங்கை தலைமன்னார் சென்றடைந்தார். அங்கு இரவு 10 மணிஅளவில் கடலில் நீந்த தொடங்கிய அவர், காலை 9 மணி அளவில், சுமார் 11 மணி நேரம் கடலில் நீந்தி தனுஷ்கோடி வந்தடைந்தார். தனுஷ்கோடி வந்த மீனாட்சி பகுஜாவுக்கு, மீனவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். சுங்கத்துறை அதிகாரிகள், சாதனைக்கான கேடயத்தை வழங்கி கௌரவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்