மலேசியாவில் உயிரிழந்த கூலி தொழிலாளி... "அடக்கம் செய்ய கூட வசதியில்லை" - மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனைவி மனு

x
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வசிக்கும் வெங்கடேஷ் என்பவர், வறுமை காரணமாக மலேசியாவில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் திடீரென உயிரிழந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு ஒன்றை அளித்தார்.
  • அதில், வறுமை காரணமாக கணவரின் உடலை அடக்கம் செய்ய வசதி இல்லை எனவும், மலேசியாவிலேயே அடக்கம் செய்து சான்றிதழை பெற்றுத் தருமாறும் குறிப்பிட்டிருந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்