ராமநாதபுர கடலுக்குள் கட்டி கட்டியாக தங்கம்.. எப்போது சிக்கும்?

x

இலங்கையிலிருந்து மண்டபம் அடுத்த வேதளை பகுதிக்கு 25 கிலோ தங்கம் கடத்தி வரப்படுவதாக, வருவாய் புலனாய் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மண்டபம் தெற்கு கடல் பகுதியில் கடலோர காவல் படையினரோடு இணைந்து அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நாட்டு படகை மடக்கிய அதிகாரிகள், அதிலிருந்த மூவரை பிடித்து விசாரணை நடத்தி, அவர்களிடமிருந்து 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வேதாளை பகுதியை சேர்ந்த மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுக்குள்15 கிலோ தங்கம் வீசப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்கூபா வீரர்களை கொண்டு தங்கத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வேதாளை பகுதியை சேர்ந்தவர் வீட்டில், மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்